பிற்கால சோழர்கள்
(TNPSC & TNUSRB இலவச முக்கிய குறிப்புக்கள் மட்டும் )
* பண்டைய சோழ அரசின் தலைநகரம் உறையூர் இன்றைய திருச்சி. இந்த வம்சம் கரிகாலன் காலத்தில் செழிப்பாக இருந்தது
* விஜயாலயன் சோழ வம்சத்தை நிறுவினார். இவரின் தலைநகரம் தஞ்சாவூர
* முதலாம் ராஜேந்திர சோழன் தலைநகரம் கங்கைகொண்டசோழபுரம்
* சோழப் பேரரசின் வலிமை பெற்ற அரசன் முதலாம் ராஜராஜன்
* முதலாம் ராஜராஜன் கட்டிய கோயில் ராஜ ராஜேஸ்வரம் ( பிரகதீஸ்வரர் கோயில்) தஞ்சாவூர் என்று அழைக்கப்படுகிறது
* முதலாம் ராஜேந்திரன் 1023 ல் அரியணை ஏறினார். சிறப்பு பெயர் கங்கை கொண்டான். இவர் ஸ்ரீ விஜயத்தை ( தெற்கு சுமத்ரா) கைப்பற்றினார்
* வீரராஜேந்திரனின் மகன் அதி ராஜேந்திரன் உள்நாட்டு கலகம் ஒன்றில் கொல்லப்பட்டார்.
* முதலாம் ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் இடையிலான திருமண உறவு தொடங்கியது. அவருடைய மகள் குந்தவை இளவரசர் விமலாதித்தனை மணந்தார். அவர்களின் மகனான ராஜராஜ நரேந்திரன் முதலாம் ராஜேந்தரின் மகளான அம்மங்கா தேவியை மணந்தார். அவர்களின் மகன் முதலாம் குலோத்துங்கன்
* விஜயாலயன் வழிவந்த கடைசி அரசர் அதிராஜேந்திரன்
* அதிராஜேந்திரன் மறைவைத் தொடர்ந்து ராஜேந்திர சாளுக்கியன் சோழ அரியணையைக் கைப்பற்றினார். முதலாம் குலோத்துங்க சோழன் எனும் பெயரில் சாளுக்கிய சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தார்
* 1279ல் பாண்டிய அரசன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் இராஜேந்திர சோழனைத் தோற்கடித்து பாண்டிய ஆட்சியைத் தோற்றுவித்தார்
* மண்டலம் - நாடு - கிராமம். கிராமமே நிர்வாக அமைப்பின் மிகச் சிறிய அளவு
* ஊரார்-நிலவுடைமையாளர்கள்
* சபையோர் - பிராமணர் கிராமங்களை சேர்ந்த பொது நிர்வாகத்தின் நிதி நிர்வாகத்தின் நீதி வழங்குபவர்கள்
* வணிகர்களின் குடியிருப்புகளை நகரத்தார் நிர்வகித்தனர்
* நாட்டார் - நாடுகளில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து வைப்பார்கள்
* உத்திரமேரூர் கிராமம் பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட ஒரு பிரம்மதேயகிராமம் ஆகும். குடவோலை முறை குறித்து கல்வெட்டுகள் இங்கு காணப்படுகிறது. குடும்பு( வார்டு) போட்டியிடுபவர்களின் குறைந்தபட்ச வயது 35-70
* சோழ அரசின் முக்கிய வரி நிலவரி. இது காணிக்கடன் என்றழைக்கப்படுகிறது
* பள்ளிச் சந்தம் - சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள
* வேளாண் வகை - நிலங்களின் உரிமையாளர்கள் வேளாளர் என்று அழைக்கப்பட்டனர்.
* உழுகுடி - வேளாண் பணி செய்பவர்கள்
* கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட 16 மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை சோழர்களின் நீர்ப்பாசனத்திற்கு எடுத்துக்காட்டு
* ஊர் வாய்க்கால் - அனைவருக்கும் பயன்படும் வாய்க்கால்
* நாடு வாய்க்கால்கள் - நிர்வாகப் பிரிவின் மட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வாய்க்கால்கள்
* நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டவை திருமுறைகள்
* முதலாம் ராஜேந்திரன் எண்ணாயிரம் எனும் கிராமத்தில் வேத கல்லூரி ஒன்றை நிறுவினார். அக்கல்லூரியில் 14 ஆசிரியர்களின் வழிகாட்டலில் 340 மாணவர்கள் வேதங்களை கற்றனர்
* புதுச்சேரிக்கு அருகில் உள்ள திருபுவனம் என்னும் ஊரிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடலிலும் இதுபோன்ற கல்லூரிகள் உள்ளது
* பெரியபுராணமும் கம்பராமாயணம் சோழர்கள் காலத்தை சேர்ந்தவை
* அஞ்சு வண்ணத்தார் - மேற்கு ஆசியர்கள், அராபியர், யூதர்கள், கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், போன்ற கடல் கடந்து வாணிபம் செய்பவர்கள்
* மணிக்கிராமத்தார் - உள்நாட்டு வணிகம் செய்பவர்கள்
* ஐந்நூற்றுவர், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் பெயர்களில் ஒருங்கிணைக்கப்பட்டது
மணிக்கு ஒருங்கிணைக்கப்பட்ட வணிகக் குழு ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் தலைமையிடம் கர்நாடக மாநிலம் ஐகோலில் உள்ளது