Uvamaiyaal vilakkapadum porul

Krishnakumar R
0

 உவமையால் விளக்கப்படும் பொருள் :


1. செம்புலப் பெயர் நீர் போல - சேர்ந்ததன் தன்மையர்தல், ஒன்று சேர்ந்திருத்தல்


2. புனையா ஓவியம் போல - அழகுபடுத்தாத / வண்ணம் தீட்டப்படாத ஓவியம்


3. காயமே அது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா - நிலையாமை


4. எரிமுன்னர் வைத்தூறு போல - அழிவு உறுதி 


5. மடைதிறந்த வெள்ளம் போல - விரைவு


6. செப்புமொழி பதினெட்டுடையாள் சிந்தனை ஒன்றுடையாள் - ஒருமைப்பாடு 


7. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை


8. சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிப்பிறப்பை மீறிய சிறப்பு, மேன்மை


9. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் -  பாசம் 


10. வில் போன்ற - புருவம்


11. நெடும் புனலுள் வெல்லும் முதலை - இடன்அறிதல்


12. குருட்டுப் பூனை விட்டத்தில்  பாய்ந்தது போல  - திறமையற்றவனின் அதிர்ஷ்டம்


13. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் - தாமதமான முடிவு (அ) செயல்


14. பழுமரம் நாடும் பறவை போல - பயன்பெறுதல் / முயற்சி செய்தல்


15. எள்ளினுள் எண்ணெய் போல - மறைந்திருத்தல்


16. ஒரு தாய் வயிற்று மக்கள் போல - ஒற்றுமை


17. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைத்தாற் போல - இழப்பு


18. பழம் நழுவி பாலில் விழுந்தது போல - விரும்பியதுகிடைத்தல்


19. அரசனை நம்பி புருசனை கைவிட்டது போல - ஏமாற்றம்


20. குரங்கின் கையில் கிடைத்த கொள்ளி போல - அளிப்பது


21. பவளம் போல் செவ்வாய்- வண்ணம்


 22. பேடிகை வாளாண்மை போலக் கெடும் - முயற்சிஇல்லாதவன்


23. கண்ணை இமை காப்பது போல - பேணுதல்


24. மலையைத் தோண்டி எலி பிடிப்பது போல - வீண் செயல்


25. அணை கடந்த வெள்ளம் போல - வேகம் / சரளமாக 


26. கட்டுக்கடங்காத காளை போல - ஊதாரி


27. விழலுக்கு இறைத்த நீர் போல - பயனின்மை


28. ஈன்றோர் நீர்த்த குழவி போல - துன்பம்


29. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - பொறுமை


30. அடியற்ற மரம் போல - வீழ்தல், நிலையற்று வீழ்தல்


31. இலவு காத்த கிளிபோல - ஏமாற்றம்


32 கடல் மடை திறந்த வெள்ளம் போல - வெளியேறுதல், விரைவு


33. பகலவனைக் கண்ட பனி போல - நீங்குதல், துன்பம் விலகுதல்


34. உள்ளங்கை நெல்லிக் கனிபோல - தெளிவு


35. தாமரையிலைத் தண்ணீர் போல - 

பற்றின்மை


36. கடலில் கரைத்த பெருங்காயம் போல - பயனின்மை


37. இடியோசை கேட்ட நாகம் போல - நடுக்கம்


38. தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி


39. நகமும், சதையும் போல - இணைபிரியாமை, ஒற்றுமை


40. எலியும், பூனையும் போல- பகை


 41. நிலத்தறைந்தான் கை பிளந்தற்று கேடு - கேடு, துன்பம்


42. நுணலும், தன் வாயால் கெடும் - அறிவிலி, அறிவில்லாதவர் 


43. கிணறு, தோண்ட பூதம் கிளம்பியது போல - எதிர்பாராத தீமை


44. குன்றின் மேலிட்ட விளக்கு போல - விளக்கமாக , தெளிவாக 


45. குடத்திலிட்ட விளக்கு போல - மறைவு, அடக்கம்


46. வளர்பிறை போல - வளர்தல்


47. ஏறுநடை போல - செயல்


 48. பாம்பும், கீரியும் போல - பகை


49. வெள்ளத் தனைய மலர்நீட்டம் போல - முயற்சிக்கேற்ற பலன்


50. மின்னாமல் இடி இடித்தது போல - எதிர்பாராத துக்கம்


51. மழை முகம் காணா பயிர் போல - வாட்டம், வாடுத்தல்


52. வேலியே பயிரை மேய்ந்தது போல -  துரோகம்


53. இருதலைக் கொள்ளி எறும்புபோல - தவிப்பு


54. இலைமறைக்காய் போல -  மறைபொருள்


55. பசுமரத்தாணி போல - எளிதில் பதிதல்


56. சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தது - மிக்க மகிழ்ச்சி


57. புளியம் பழமும் ஓடும் போல - ஒட்டாமை


58. புற்றீசல் போல - பெருகுதல்


59. பசுந்தோல் போர்த்திய புலி போல - ஏமாற்றுதல்


60. நத்தைக்குள் முத்து போல - மேன்மை,உயர்வு


61. சேற்றில் பிறந்த செந்தாமரை போல - மேன்மை


62. பாம்பின் வாய்த் தேரை போல - மீளாமை


63. நீரும், நெருப்பும்  போல -  விலகுதல்


 64. கடன்பட்டார் நெஞ்சம் போல - வருத்தம், கலக்கம்


65. எட்டாப் பழம் புளித்தது போல - ஏமாற்றம்


66. ஆப்பசைத்த குரங்கு போல - வேதனை, துயரம்


67. அரைக் கிணறு தாண்டியது போல - ஆபத்து


68. அச்சில் வார்த்தாற் போல - ஒற்றுமை /  உண்மை தன்மை


69. உமி குற்றிக் கை சலித்தது போல - பயனற்ற செயல்


70. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல -  பெருந்துன்பம்


71. அடுத்தது காட்டும் பளிங்கு போல - தெளிவு, வெளிப்படுதல்


72. அத்தி பூத்தாற் போல - அறிய செயல் , அருமை


73. அன்னம் போல - நடை


74. இணரூழ்த்தும் நாறா மலரனையர் -  கற்றதை விரித்துரைக்க இயலாதவர்


75. ஊருணி நீர் நிறைந்தற்று - பண்பாளர் செல்வம்


76. கனிருப்பக்காய் கவர்ந்தது போல - இன்னாச்சொல் கூறுதல், கடுஞ்சொல் கூறுதல்


77. கிணற்றுத் தவளை போல - அறியாமை


78. குன்றேறி யானைப் போர் கண்டது போல - செல்வத்தின் சிறப்பு


79. திங்களை நாய் குரைத்தற்று - பயனற்ற செயல்


80. நவில்தோறும் நூல் நயம்போல - பண்பாளர் தொடர்பு


81. நாய் பெற்ற தெங்கம்பழம் போல - பயனற்றது


82. பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன - நாரையின் மூக்கு


83. மலரும் மணமும் போல - நெருக்கம் ,ஒற்றுமை


84. மதில்மேல் பூனை போல -  உறுதியற்றது


85. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது - பேராசை


86. வெண்ணிலவும் வானும் போல - நெருங்கிய நட்பு


87. நன்பாற் கலம் தீமையால் திரிதல் - கூட நட்பில் அழிதல்


88. காராண்மை போல ஒழுகுதல் -  வள்ளல் தன்மை 


89. பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்ததுபோல - எதிர்பாராத தீமை


90. தானுருகி ஒளிதரும் மெழுகு போல - தியாகம்


91. அன்றலர்ந்த தாமரை போல - முக மலர்ச்சி


92. ஆமை போல ஐந்தடங்கல் - அடக்கம்


93. உடுக்கை இழந்தவன்- நட்பு


95. கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல - பார்க்க விரும்பி ஒருவர் எதிரே வருவது / எதிர்பாராத நன்மை 


94. கூர்மையரேனும் மரம் போல்வர் - மக்கட் பண்பு இல்லாதவர் 


96. தாமரை போல - முகம்


97. யானையாற் யானையாத் தற்று - ஒரு செயலைக் கொண்டு மற்றொர் செயலை முடித்தல்

 

98. பல்லுயிர் காத்த மருந்தென - இயேசு பிரான்


99. வள்லுகிர் புலியெலாம ஒரு வழி புகுந்தாற்போல  - படைகளெலாம் ஓரிடத்தில் திரளுதல்


100. அரியினொடு அரியினம் அடர்ப்ப போல - அரசரோடு அரசர் போரிடுதல்


101. மண்ணுக்குள் மறைந்திருக்கும்  நீர்போல - மாந்தருக்குள் ஒளிந்திருக்கும் திறன்


102. மதுவுண்ட குரங்கு போல - 

மயக்கம்


103. சூழ்கொண்ட மேகம் போல - எதிர்பார்ப்பு


104. கடுகு உள்ளம் போல - சிறுமை


105. செய்தி காட்டுத் தீ பரவியது போல - விரைவு


106. நூலறுந்த பட்டம் போல - தவிப்பு


107. திருடனை தேள் கொட்டியது போல - திகைப்பு


108. இஞ்சி தின்ற குரங்கு போல - திகைப்பு


109. நீர்க்குமிழி யன்ன வாழ்க்கை போல - நிலையாமை


110. குந்தித் தின்றாள் குன்றும் மாளும் - சோம்பல்



Post a Comment

0Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top