பொருள்இலக்கணம்
பொருளிலக்கணம் அகம், புறம் என்னும் இரண்டு வகைப்படும்
அகப்பொருள்
அகப்பொருள் பற்றிய ஒழுக்கமே அகத்திணை எனப்படும்
( திணை - ஒழுக்கம் )
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை , கைக்கிளை, பெருந்திணை என அகத்திணை ஏழு வகைப்படும்
குறிஞ்சி முதல் பாலை வரை உள்ள ஐந்தும் அன்பின் ஐந்திணை எனப்படும்
அகப் பொருளுக்கு உரிய பொருள்கள் :-
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்
முதற்பொருள்
நிலமும், பொழுதும் என முதற்பொருள் இருவகைப்படும்
நிலம்
நிலம் ஐந்து வகைப்படும்
குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும் முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை - மணலும் மணல் சார்ந்த இடமும்
அல்லது சுரமும் சுரம் சார்ந்த இடமும்
பொழுது
பொழுது சிறுபொழுது, பெரும்பொழுது என இரு வகைப்படும்
பெரும்பொழுது
பெரும்பொழுது ஒரு ஆண்டின் ஆறு கூறுகள்
கார்காலம் - ஆவணி , புரட்டாசி
குளிர்காலம் அல்லது கூதிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை
முன்பனிக்காலம் - மார்கழி , தை
பின்பனிக் காலம் - மாசி, பங்குனி
இளவேனிற் காலம் - சித்திரை , வைகாசி
முதுவேனிற் காலம் - ஆனி , ஆடி
சிறுபொழுது
ஒரு நாளின் ஆறு கூறுகள்
ஒவ்வொரு சிறுபொழுதும் நாலு மணி நேரம் அல்லது 10 நாளிகை கொண்டதாகும்
காலை - 6 மணி முதல் 10 மணி வரை நண்பகல் - 10 மணி முதல் 2 மணிவரை எற்பாடு - 2 மணி முதல் 6 மணி வரை
( எல்+ பாடு எல் -சூரியன் பாடு - மறையும்)
மாலை - 6 மணி முதல் 10 மணி வரை
யாமம் - 10 மணி முதல் 2 மணி வரை
வைகறை - 2 மணி முதல் 6 மணி வரை
திணையும் பொழுதும்
ஆ- முதன்முதலில் குறிஞ்சி நிலத்திற்கு உரிய விலங்கு
உழவு தொழில் தோன்றிய நிலம் -முல்லை
கருப்பொருள்
தெய்வம் , மக்கள், உணவு, ஊர், தொழில்
குறிஞ்சி நிலத்திற்கு உரிய கருப்பொருட்கள்
தெய்வம் - முருகன்
மக்கள் - குறவர், குறத்தியர் , வெப்பன்
உணவு - மலை நெல் , தினை
ஊர் - சிறுகுடி
தொழில் - தேனெடுத்தல் , கிழங்குகளை அகழ்தல், திணை விதைப்பது
முல்லை நிலத்திற்கு உரிய கருப்பொருள்
தெய்வம் - திருமால்
மக்கள் - ஆயர் , ஆய்ச்சியர், தோன்றல்
உணவு - வரகு , சாமை
ஊர் - பாடி , சேரி
தொழில் - நிரை மேய்தல், ஏறுதழுவுதல் , பால் கடைவது , வரகு விதைப்பது
மருதம் நிலத்திற்கு உரிய கருப்பொருள்
தெய்வம் - இந்திரன்
மக்கள் - உழவர் , உழத்தியர் , ஊரன்
உணவு - செந்நெல், வெண்ணெல் அரிசி
ஊர் - பேரூர் , மூதூர்
தொழில் - களை பறித்தல் , நெல் அரித்தல் , நகர் அமைப்பது , ஆட்சி புரிவது
நெய்தல் நிலத்திற்கு உரிய கருப்பொருள்கள்
தெய்வம் - வருணன்
மக்கள் - பரதன், பரதியர் , சேர்ப்பன்
உணவு - மீன்
ஊர் - பட்டினம் , பாக்கம்
தொழில் - மீன் பிடித்தல் , உப்பு விளைவித்தல், மரக்கலம் ஏறி வாணிபம் செய்வது
பாலை நிலத்திற்குரிய கருப்பொருள்
தெய்வம் - கொற்றவை( காளி )
மக்கள் - எயினர், எயிற்றியர், காளை
உணவு - வழிப்பறி
ஊர் - குறும்பு
தொழில் - நிறை கவர்தல், வழிப்பறி
உரிப்பொருள்
குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும் முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
புறத்திணை அல்லது புறப்பொருள்
அறம், பொருள்,இன்பம், வீடு பற்றியும் கல்வி ,வீரம் ,கொடை , புகழ் பற்றியும் கூறுவது புறத்திணை ஆகும்
புறத்திணை 12 வகைப்படும்
1- வெட்சித்திணை - நிரை கவர்தல்
2 - கரந்தை திணை - நிரை மீட்டல்
3 - வஞ்சி திணை - பகைவர் நாட்டைக் கைப்பற்றி கருதி போருக்குச் செல்லுதல்
4 - காஞ்சித்திணை - நாட்டை கைப்பற்ற வந்த அரசனோடு போரிடல்
5-நொச்சித் திணை - மதிலை காப்பது
6- உழிஞைத் திணை - மதிலை கைப்பற்றுதல்
7- தும்பைத்திணை - வெற்றி ஒன்றே குறிக்கோளாய் கொண்டு ஊக்கத்தோடு போரிடல்
8- வகைத்தினை - வெற்றி பெற்ற மன்னன் வாகை சூடி மகிழ்வான்
9- பாடாண் திணை - மன்னனின் புகழ் வலிமை இரக்கம்முதலியவற்றை புகழ்தல்
10 - பொதுவியல் திணை - வெட்சி முதல் படாண் வரை உள்ள திணைகளுக்கும் பொதுவானவற்றையும் அவற்றில் கூறப்படாத செய்திகளையும் கூறுதல்
11- கைக்கிளை- ஒருதலைக் காமம்
12 - பெருந்திணை - பொருந்தாக் காமம்